வேப்பந்திடல் ஶ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய
2020ம் வருட சங்காபிஷேக,மற்றும் மகோற்சவ கால வைபவங்களை முன்னிட்டு சரியைத்தொண்டாற்ற (சிரமதானம்) வருமாறு அன்னையின் புதல்வர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
ஆலயத்தோடு ஆலய வளாகத்தில் அரும் பணியாற்றல் காலம்: 2020/07/04 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும்.அனைவரும் வருக.
காலம் நம்மை வெவ்வேறு திசைகளில் நிறுத்தியிருந்தாலும்,ஆலய சந்நிதானங்களில் ஒன்றிணைதல் ஒன்றே நம் மண்ணுக்கும்,
தேவி அன்னைக்கும், அக மகிழ்வுக்கும் நாம் கொடுக்கின்ற ஆத்ம பரிகாரம் ஆகும்.
அவ் வகையில் ஆலயங்களின் அழைப்பென்பது தெய்வங்கள் நம்மை தேடிக்கொண்ட சேதியேயாகும். அதனை உணர்ந்து நாடி ஒருமுறை இத் திருநாளிலோ அல்லது விழாநாளிலோ நாம் வருதல் நம் பூமிக்கும் அன்னைக்கும் நாம் கொடுக்கும் நன்றி உபகாரம் எனக்கொள்வோம்.
-என்றும் அனைவரினதும் கரம்பற்றி வரவேற்க காத்திருக்கும் வேப்பந்திடல் முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினரின் அன்புக்கோரிக்கையை அவ்வவ்வேளைகளில் நம் உறவுகள் எல்லோரிடமும் எடுத்துச்செல்லுங்கள் எம் அன்பு உறவுகளே!
-நன்றி-
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்