மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்தவரும் . கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னய்யா தர்மலிங்கம் ( செல்லத்துரை) அவர்கள் இன்று கனடாவில் காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம் .
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தர்மலிங்கம் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரமேசன், ரஜனி, சபேசன், மகேசன், ரமணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தில்லைநேசன், மஞ்சுளா, சர்மிளா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான யோகலிங்கம், பரம்சோதி, நாகம்மா, அம்பிகாவதி, பாலகிருஷ்ணன்(பாலு), துரைரெட்ணம்(சாமி), வசந்தமலர், மற்றும் சுகிர்தமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான உமாபதி, உலகேஸ்வரி, மற்றும் காந்தமலர், நடனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அசோக் றமணா, பிருத்வி, ஹரிணி, அஷானி, சந்தோஷ், மகிஷா, ஆத்மிகன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.