
வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவுங் கொண்ட நீண்டகாலச் சமூக சேவையாளர் திரு நல்லதம்பி கணேசபிள்ளை அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 88வது வயதில் தலைகாட்டியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அன்னார் தனது பகுதி நேரத்தில் நல்லெண்ணெய் உற்பத்தி செய்து வியாபாரம் செய்துவந்தமையால் எண்ணெய்க்காரக் கணேசபிள்ளை என்று அறியப்பட்டவர். தனது இறுதிக்காலத்தில் கோயிலுண்டு தானுண்டு என்று சைவமாந் தவத்தைச் செய்துகொண்டு வாழ்ந்து வந்த பிள்ளை … வாழ்வு முழுவதும் எல்லோருக்கும் பிள்ளைமை உடையவராக வாழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. இவரது மூத்த மகள் திருமதி திருச்செல்வி சிறீ அவர்கள் எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியை (1986-1987) என்பது குறிப்பிடத்தக்கது.
வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் – கனடாவின் சார்பில் அன்னாருக்கு எமது இறுதி வணக்கத்தையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்திக்கொள்கின்றோம். மேலும் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரதும் துக்கத்தில் நாமும் பங்கு கொள்வதோடு அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து அன்னாரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
இறுதிச் சடங்குகள் பற்றிய விபரம் குடும்பத்தாரால் பின்னர் அறிவிக்கப்படும்.
சி. இளஞ்செழியன் (தலைவர்)
வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்-கனடா
Yours Sincerely,
S. Elancheliyan
President
And on behalf of the Executive Committee of VCCOSA-CANADA
Tel: 416-949-7795 (Mobile)
E-mail: vccosacanada@gmail.com
Website: www.vccosacanada.com
President
And on behalf of the Executive Committee of VCCOSA-CANADA
Tel: 416-949-7795 (Mobile)
E-mail: vccosacanada@gmail.com
Website: www.vccosacanada.com
Facebook: www.facebook.com/vccosacan
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்