இயற்கை உணவை மனிதன் உண்டு வாழ்ந்தால் நோய் இல்லாமல்
வாழலாம் என்பதை இறைவன் எல்லா மதங்கள் வாயிலாகவும்
நமக்கு எடுத்து உணர்த்தியுள்ளான்.
முன் காலத்தில் இந்து மதத்தில் இறைவனுக்கு படைப்பதற்க்காக
தேங்காய், பழம் பயன்படுத்தினார்கள். ஆனால் காலம் மாறியதும்
தேங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அது இது என்று அதை
அப்படியே சாப்பிடும் பழக்கம் இல்லை. இன்னொரு பரவலான செய்தி
என்னவென்றால் தேங்காயை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி உண்டாகும்
என்றும் காலையில் மலம் கழிக்கும் போது மலத்துடன் கலந்து
பூச்சி வருவதை பார்த்து யாரோ பரப்பிவிட்ட வதந்தி தான் அது.
உண்மையில் நம் வயிற்றில் உள்ள பூச்சிகளை தான் வெளியே
கொண்டுவந்திருக்கிறது வெறும் தேங்காய் மட்டும் சாப்பிட்டால்
பலன் முழுமையாக கிடைக்காது என்பதற்க்காகதான் தேங்காய் பழம்
சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதை மறக்காமல் இருக்க தான்
இதை இறைவனுக்கு சேர்த்தே படைக்கிறோம்.
இதே போல் முன் காலத்தில் இயேசு நாதர் தன் சீடர்களுக்கு
திராட்சை ரசம் கொடுத்தும் நம் நினைவிற்க்கு வரும். மனிதனுக்கு
ஏற்படும் பல வகையான் நோய்களுக்கு வெறும் திராட்சை ரசம்
உயர்ந்த மருந்து என்பதை வெளிநாட்டினர் சொன்ன பிறகு தான்
நமக்கு ஞானம் ஏற்படுகிறது. தெரிந்தும் அதைப் பயன்படுத்தாமல்
இன்னும் எத்தனை பேர் மருந்து மாத்திரையை நம்பி வாழ்கின்றனர்.
அடுத்து நபிகள் நாயகம் முன் காலத்தில் தொழுகை முடிந்ததும்
பேரீட்ச்சை பழம் கொடுப்பது வழக்கம் இன்னும் சில நாடுகளில்
இந்த பழக்கம் இப்போது கூட இருந்து வருகிறது. மனிதனை
எப்படியாவது இயற்கை உணவிற்க்கு கொண்டு வந்து நோயில்லாமல்
வாழ வைக்க வேண்டும் என்பதற்க்காக எல்லா மதத்திலும்
இறைவன் முதன்மையான இயற்கை உணவை வைத்திருக்கிறான்.
சற்று சிந்தித்துப்பாருங்கள் இதை எல்லாம் சாப்பிட்ட அந்த
காலத்து மனிதனுக்கு நோய் இப்போது இருக்கும் அளவிற்க்கு
தாக்கவில்லையே இது ஒன்று போதாதா ? சீறுநீர கல் பிரச்சினைக்கு
இயற்கை உணவின் மூலம் மூன்றே நாளில் முழுமையாக
குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியை அடுத்த பதிவில் விரிவாக
பார்க்கலாம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்