பொதுவாக விரதங்கள் நாம் இருப்பது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றே. ஆனால் எந்த விழாவின் போது விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது யாரும் அறிந்ததில்லை. அதை பற்றி இங்கு பார்ப்போம்.
🌀 சங்கடஹர சதுர்த்தி : தேவையற்று ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும்.
🌀 விநாயக சதுர்த்தி : வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகனின் பூரணமான அருள் கிட்டும்.
🌀 சரவண விரதம் : குடும்பத்தில் அனைவரிடமும் ஒற்றுமை பெருகி. ஆனந்தமும், சந்தோஷமும் கிட்டும்.
🌀 வைகுண்ட ஏகாதசி : குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும்.
🌀 சஷ்டி விரதம் : மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும். புண்ணியம் தரும்.
🌀 கௌரி விரதம் : குறையாத செல்வமும், நீண்ட ஆயுளும், நல் மனைவியும், குழந்தைகளும் கிடைக்கும்.
🌀 வரலெஷ்மி விரதம் : மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். திருமணமான தம்பதியரிடையே நல் ஒற்றுமை நிலவும்.
🌀 பிரதோஷ விரதம் : மன அமைதி கிடைத்திடும், நீண்ட நல் ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும்.
🌀 மகா சிவராத்திரி : சிவ பெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
🌀 வைகாசி விசாகம் : நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் கிடைக்க பெறுவர்.
🌀 நவராத்திரி விரதம் : மனநலம், நீண்ட நல் ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.
🌀 கோகுலாஷ்டமி விரதம் : மனநலம், நீண்ட நல் ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.
🌀 அமாவாசை விரதம் : பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும்.
🌀 பௌர்ணமி விரதம் : வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஸ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும்.
🌀 கார்த்திகை விரதம் : எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும்.
விரதத்தின் மகிமையினை புரிந்துகொண்டு விரதமிருந்த வளமும் நலமும் பெற முடியும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்