மரண செய்தி திரு மெறில் கிளின்டன் செல்வநாதன்
(பழைய மாணவர்- நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, Software Engineer – Maadya Digital pvt. Ltd)
அன்னை மடியில் : 14 ஏப்ரல் 1985 — இறைவன் அடியில் : 19 ஓகஸ்ட் 2016
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மெறில் கிளின்டன் றெஜிஸ் செல்வநாதன் அவர்கள் 19-08-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி பாக்கியநாதர் தம்பதிகள், மற்றும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பஸ்தியாம்பிள்ளை சூசைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
றெஜிஸ் செல்வநாதன்(ஓய்வுபெற்ற பதிவேட்டுக் காப்பாளர்- வலயக் கல்வித் திணைக்களம், வவுனியா), மரிய றீற்றா(லீலா) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
றபாயேல் தொம்சன்(Golden Star Beach Hotel – Negombo) அவர்களின் ஆருயிர்ச் சகோதரரும்,
றொஷாலியா(Golden Star Beach Hotel – Negombo) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-08-2016 புதன்கிழமை பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து இறுதி அஞ்சலிக்காக கடற்கரை வீதி புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் கொழும்பு கடற்கரைத் தெருவிலுள்ள கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல118/1/1,
கடற்கரை வீதி,
நீர்கொழும்பு.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றெஜிஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779929511
தொம்சன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774412333
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்