யாழ் தீவகத்தின் தலைத்தீவாகிய,மண்டைதீவின் கிழக்குக் கடற்கரையோரம் அமர்ந்திருந்து காவல்காத்து அருள்புரியும்-பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் விழா 20.06.2016 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
பக்திபூர்வமாக விடிய விடிய நடைபெற்ற-பொங்கல் விழாவில் காவடியாட்டம்,தீமிதிப்பு,வழிவெட்டல் என்பன இடம்பெற்றன.பக்தர்களுக்கு வயிறாற அன்னதானமும் வழங்கப்பட்டது.
மண்டைதீவு,அல்லைப்பிட்டி பகுதிகளிலிருந்து வருகைதந்த பெருமளவான மக்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு கண்ணகை அம்மனின் அருள் பெற்றுய்தனர்.
தலைத்தீவின் -காவல்நாயகி-கண்ணகை அம்மனின் பொங்கல் விழாவினை நேர்த்தியாகப் பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு எடுத்து வந்துள்ளோம்.
அனுசரணை வழங்கியவர்கள்….
கண்ணகை அம்மனுக்கு தான் இறக்கும் வரை-பணிவிடை செய்து வந்தவரும்-தான் மறைந்த பின்பும்-தான் செய்த அன்னதான பணியினை தொடர்ந்து தனது வாரிசுகள் மூலம் செய்யத் தூண்டியவருமாகிய, அமரர்கள் இராசரத்தினம்-மகேஸ்வரி தம்பதிகளின் நினைவாக-அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்