1) மனிதன் பாவச் செயல்களில் ஈடுபடுவதற்கு
அடிப்படையான காரணங்கள் எவை என்று யோசித்தால் –
ஆசையும், கோபமும் தான் முன் வந்து நிற்கின்றன.
எனவே ஆசையையும், கோபத்தையும் கட்டுப்படுத்த
கற்றுக் கொண்டால் – நாம் பாவச்செயல்களில் ஈடுபடுவது
குறைந்து விடும்…
2) கடவுளை நாம் பிரார்த்தனை செய்வதாலோ,
பூஜை செய்வதாலோ – அந்த கடவுளுக்கு எதாவது
பிரயோஜனம் உண்டா….?
நம் எண்ணங்களை சுத்தப்படுத்திக் கொள்ள
பிரார்த்தனையும், பூஜையும்
-நமக்கு தான் பயன்படுகின்றன.
3) நாம் செய்கிற பாவத்திற்கான தண்டனையும் சரி,
புண்ணியத்திற்கான நன்மையும் சரி –
இரண்டுமே என்றாவது ஒரு நாள் நிச்சயம் நம்மை வந்து சேரும்
என்பதை தீவிரமாக நம்பினால் –
பாவச் செயல்கள் குறையும், புண்ணியச் செயல்கள் பெருகும்…!
4) சில விஷயங்களை மற்றவர்களுக்கு நாம்
எடுத்து சொல்வதை விட,
நாமே எடுத்துக் காட்டாக நடந்துகொள்வது –
சிறந்த பலனை அளிக்கும்…! …………..அல்லவா…..?
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்