Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா ஞானமணி அவர்கள் (தலைமை ஆசிரியை மண்டைதீவு கார்த்திகேய வித்தியாலயம் )இன்று காலை (22. 12. 2015) இறைபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
வீரியமான வெங்காயம்
காயம் என்ற சொல்லுக்கு கறி வாசனைச் சரக்கு என்று அர்த்தமாகும். வெங்காயம் என்றால், அது வெண்மையான காயம் என்பதாகும். உள்ளி எனவும் இதை இயம்புவார்கள். பூண்டு இனம் சார்ந்தது இது என்ற இனிய உரையும் உள்ளது.
Filed under: Allgemeines | Leave a comment »
இன்2016 இராசிபலன்கள் யாருக்கு நன்மை…..??
2016இன் இராசிபலன்கள் யாருக்கு நன்மை…..??
01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது.
சிம்ம இராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு, அமோகமாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் விருத்தியாகும். அன்னிய நாட்டவரின் அதட்டல் அடங்கிவிடும். விண்வெளி ஆராய்ச்சிகள் வெற்றி பெறும். மக்களுக்கு தேவையான வசதிகள் பெருகும். விவசாயம் செழித்தோங்கும் Continue reading
Filed under: Allgemeines | 1 Comment »
திரு பரிமளகாந்தன் செந்தூரன்
திரு பரிமளகாந்தன் செந்தூரன்
மலர்வு : 8 செப்ரெம்பர் 1985 — உதிர்வு : 5 டிசெம்பர் 2015
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட பரிமளகாந்தன் செந்தூரன் அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று இறையடி இணைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மண்டைதீவு தில்லைநாதன் சிரோன்மணி தம்பதிகள், மற்றும் குருசாமி சின்னம்மாதம்பதிகளின் அன்புப் பேரனும்.
பரிமளகாந்தன் தில்லைநாதன்(ஓய்வுபெற்ற அதிபர்- இலங்கை) கண்ணகை(ஓய்வுபெற்ற கணக்காளர்- இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,
ஆதிரை(லக்க்ஷி- கனடா), அனந்தரூபன்(அருண்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற கனகசபாபதி(ஓய்வுபெற்ற விவசாயப்பணிப்பாளர்), இராஜேஸ்வரி(யாழ்ப்பாணம்), அருணாசலம்(யாழ்ப்பாணம்), மலர்தேவி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
பத்மநாதன்(அல்லைப்பிட்டி), காலஞ்சென்ற செல்வநாயகி, பரஞ்சோதிநாதன்(டென்மார்க்), சந்திரவதனா(டென்மார்க்), ஸ்ரீகாந்தன்(கனடா), திலகவதி(கனடா), பற்குணன்(லண்டன்), விக்னேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற பரிமேலழகன், சரோஜாதேவி(ஓய்வுபெற்றஅதிபர்- மன்னார்), செபரட்ணம்(மன்னார்), காலஞ்சென்ற நிர்மலா ஆகியோரின் அருமைப் பெறாமகனும்,
சத்தியநேசன்(கனடா), கிருசாந்தி(கனடா), மங்கையற்கரசி(கனடா), கலையரசி(யாழ்ப்பாணம்), கெளரீசன்(யாழ்ப்பாணம்), சிறோமி(யாழ்ப்பாணம்), சியாமிலி(யாழ்ப்பாணம்), சுவேதினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராதா(கனடா), திருமாறன்(பிரான்ஸ்), மணிமாறன்(அல்லைப்பிட்டி), தமிழ்மாறன்(அல்லைப்பிட்டி), தமிழினி(பிரான்ஸ்), சங்கீதா(கனடா), பிருந்தா(டென்மார்க்), பிரதீபன்(டென்மார்க்), சிந்து(கனடா), தீபன்(கனடா), மிதிலா(லண்டன்), விதுலன்(லண்டன்), கம்சவதனி(மன்னார்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
அதிசயா அவர்களின் அன்பு மாமனாரும்,
அனுசன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரிமளகாந்தன்(தந்தை) — கனடா
தொலைபேசி: +19052819606
செல்லிடப்பேசி: +14164716297
அருண்(சகோதரன்) — கனடா
செல்லிடப்பேசி: +1647500 1194
நேசன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16479917726
சிறிகாந்தன்(சித்தப்பா) — கனடா
செல்லிடப்பேசி: +16474570459
Filed under: Allgemeines | Leave a comment »