மண் பூத்து புகழ் காத்த எம் கண்ணகி தாயாருக்கு புதிதாக ஆலயக்கட்டிடம் அமைக்கப்பெற்று ,குடமுழுக்கு , சங்காபிசேகம் ,நடைபெற்று இனிதேறிய இவ்வேளையில் ஆலய திருப்பணிக்காக நிதி உதவிய அன்பர்கள் அனைவருக்கும் எமது பணிவான நன்றிகள் .
இவ் ஆலயத்தின் அமைப்பையும் கும்பாவிசேக , சங்காபிசேக நிகழ்ச்சிகளையும் இணையத்தளங்கள் மூலமாக பார்த்து மகிழ்ந்து இருப்பீர்கள் என நாம் முழுமையாக நம்புகின்றோம் .
இருப்பினும் தற்போதைய நிலையில் தினமும் ஆலயத்திற்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு இம்மண்டபம் போதுமானது ஆனால் விசேடமான தினங்களில் குறிப்பாக சித்திரா பவூரமி (பறுவம் ) விசாகப் பொங்கல் , பூம்புகார் கண்ணகை அம்பாள் ஊர்வலம் , அத்துடன் தொடர்ந்து வருடா வருடம் நடைபெற இருக்கும் சங்காபிசேகம் போன்ற தினங்களில் பக்தர்கள் நின்று வழிபட இடவசதி போதுமானதாக இல்லை.
இவ் ஆலயத்தில் நடந்து முடிந்த கும்பாபிசேக நாட்களுக்கு சிறிதாக ஒரு கொட்டகை வாடகைக்கு அமர்த்தியமைக்கு நாற்பத்தி ஐயாயிரம் இலங்கை ரூபா செலவாகியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது எனவே இவ் ஆலயத்திற்க்கு ஓர் தரிசனமண்டபம் தவிர்க்கமுடியாத அவசியமாக உள்ளது . இம் மண்டபத்தை கட்டி முடிப்பதற்கு ஏறத்தாள எட்டு லட்சம் இலங்கை ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது ,(கும்பாவிசேகம் நடை பெற்று 14 வருடங்கள் சங்காபிசேகம் இடம் பெற்ற பின்பு தான் கும்பாவிசேகம் நடைபெறும் என்பது நீங்கள் அறிந்ததே . அதன் அடிப்படியில் மேற் குறிப்பிட்ட விசேட தினங்களுக்காக இந்த மண்டபத்திணை அமைக்க முன் வந்துள்ளோம் .)
அதற்க்கான நிதி உதவியினை புலம் பெயர்ந்து வாழும் சாம்பலோடை கண்ணகை அம்மன் அடியார்களிடம் மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் .
சாம்பலோடை கண்ணகை அம்மன் பரிபாலசபையினர் .
தொடர்புகளுக்கு …
க . வசீகரன் தலைவர் இலங்கை .0094 776120900
சி . ஜெயசிங்கம் கனடா ..(1416) 319 0409.
சி . சிவ ஸ்ரீகுமாரன் சுவிஸ் ..(4143) 4999362.
மேற்படி மண்டபத் திருப்பணிக்கு நிதி உதவி செய்ய முன்வந்து உள்ளோர் விபரங்கள் …..
1) சி . ஜெயசிங்கம் கனடா ——50,000.இலங்கை ரூபா
2) செ. இந்திரன் லண்டன் ——-50,000.இலங்கை ரூபா
3) பொ. சத்தியமூர்த்தி ————50,000.இலங்கை ரூபா
4) சி . ஸ்ரீகுமாரன் ———————50,000.இலங்கை ரூபா
5) சி . யகுலநாதன் ——————-50,000.இலங்கை ரூபா
6) லி . வீரராகவன் ——————-50,000.இலங்கை ரூபா
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்