3 பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை 💭 தியாகம் செய்பவன் .
4 காதலிக்கு 👰 பரிசளிக்க தன் பர்ஸை காலி செய்பவன்.
5 மனைவி குழந்தைகளுக்காக 👪, தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன்.
எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்.
6 இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-
முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன்.
7 அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.
8 அவன் வெளியில் சுற்றினால், ‘உதவாக்கரை’ என்போம் 💧
வீட்டிலேயே இருந்தால், ‘சோம்பேறி’ என்போம்.
9 குழந்தைகளை கண்டித்தால், ‘கோபக்காரன்’ என்போம், கண்டிக்கவில்லை எனில், ‘பொறுப்பற்றவன்’ என்போம்.
10 மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் ‘நம்பிக்கையற்றவன்’ என்போம், அனுமதித்தால் ‘பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்’ என்போம்.
11 தாய் சொல்வதை கேட்டால், ‘அம்மா பையன்’ என்போம்; மனைவி சொல்வதை கேட்டால், ‘பொண்டாட்டி தாசன்’ என்போம்.
12 ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.
13இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும் பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்