திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 27.05.2015 (படங்கள் இணைப்பு)

வெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினை காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
தற்பொழுது ஐந்தாம் தள கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பண்டிகை அமைத்து சிற்பவேலைப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .
இன்னும் எம் பெருமானின் திருப்பணிகள் முழுமைபெற
சிற்ப வேலைப்பாடுகள்
பொம்மைகள் அமைத்தல்
வர்ணம் பூசுதல்
ஆகிய வேலைப்பாடுகள் இருப்பதனால்
இவ் விரிந்த உலகில் பரந்து வாழும் எம் பெருமான் மெய்யடியார்கள் இப் பெருங் கைங்கரியத்தில் விரைந்து இணைந்து வெண்காட்டு பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம்.

படங்கள் : லக்கீஷன் – திருவெண்காடு மண்டைதீவு



Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்