![]()
ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதுடன், பிறரையும் வாழவிட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்துவதே இதன் நோக்கம். 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதி ஐக்கிய நாடுகளின் பொது சபையால் உலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை, பெருமைப்படுத்தும் விதத்தில் 1950ல் இத்தினம் தொடங்கப்பட்டது. உலகில் வாழும் அனைத்து மனிதர்தர்களும் சமமானவர்களே. ஒருவரிடமிருந்து நாம் எவ்வித உரிமையை எதிர்பார்க்கிறோமோ, அதே உரிமையை மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும். யாரும் யாரையும் அடிமைப்படுத்தக் கூடாது. மனித உரிமை என்பது எது? ஒருவர் பிறக்கும் போதே, அவருக்கான மனித உரிமைகள் வந்து விடுகின்றன. உயிர் வாழ்வதற்கான உரிமைகள், கருத்து சுதந்திரம், மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் ஒரு மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் எனலாம். இது அனைத்து மக்களும் அங்கீகரிக்கக்கூடிய சர்வதேச அங்கீகாரத்தை பெற்றவை. ஐ.நா விருது நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையிடத்தில் 1968ல் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மனித உரிமைகளுக்கான ஐ.நா., சபை விருது வழங்கப்படுகிறது. என்ன செய்ய வேண்டும் மனித உரிமை என்பது தனிப்பட்ட மனிதரின் செயல், ஆகவே நமக்கு எவ்வளவு உரிமைகள் இருக்கிறதோ, அதேபோன்று பிறரின் உரிமைகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். இவற்றை சட்டத்தினால் கொண்டு வரமுடியாது, தனிப்பட்ட மனிதர்களின் செயல்களில் உள்ளது. |
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்