–
1) ஒற்றைக்கால் பந்தலில் ஊரெல்லாம் தங்கலாம் – அது என்ன?
2) முரட்டு மனிதனுக்கு முப்பத்திரண்டு பேர் காவல்- அது என்ன?
–
3) நடந்தால் நடக்கும் நின்றால் நிற்கும் – அது என்ன?
–
4) உயிரற்ற பறவை, ஊர் ஊராய் பறக்கும் – அது என்ன?
–
5) விறகெரியத் துணையாகும், விளக்கெரிய பகையாகும் – அது என்ன?
–
6) நம்மைப் போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது – அது என்ன?
–
——————
விடைகள்:
–
1) ஆலமரம்
2) நாக்கு
3) நிழல்
4) விமானம்
5) காற்று
6) புகைப்படம்
–
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்