மண்டைதீவுச் சந்தியிலிருந்து மண்டைதீவு கிராமத்திற்குள் செல்லும் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது முழுமூச்சுடன் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குண்டும் குளியுமாகக் கிடந்த இவ்வீதியினாலேயே இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பயணங்களை மேற்கொண்டு வருவதுடன்- மழைக்காலங்களில் வீதியினை மேவிப்பாயும் கடல்நீரினால் மண்டதீவுக்கான போக்குவரத்துகள் பல தடவைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
நீண்ட காலத்தின் பின்னர் புனரமைக்கப்படும் இவ்வீதியினால்- மண்டைதீவில் வசிக்கும் 600 குடும்பங்கள் எதிர்காலத்தில் பயனடைவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வீதியின் புனரமைப்புப் பணிகளை -வேலணை பிரதேசசபையின் தவிசாளர் திரு சின்னையா சிவராசா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மேலதிக அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி அல்லையூர் இணையம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்