மண்டைதீவுப் பகுதியில் உள்ள மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான குடிநீர்ப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்;னும் ஓரிரு மாதங்களே உள்ளன.மேற்படி பகுதிக்கான குடிநீரை அல்லைப்பிட்டியிலிருந்து குழாய் மூலம் கொண்டு வந்து மக்களுக்கு விநியோகிக்க நீர்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி தற்போது மண்டைதீவுப் பிரதேசத்தில் குழாய்கள் புதைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் அல்லைப்பிட்டி-மண்டைதீவு இணைப்பு வீதியில் குழாய்களைப் புதைக்க மக்களின் உதவியினை நீர்ப்பாசனத் திணைக்களம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மறுமொழியொன்றை இடுங்கள்